அப்போஸ்தல நடபடிகள் நூலின் உள்ளடக்கம்.
இந்தப் புத்தகத்தின் முதல் 12 அதிகாரங்கள் பேதுருவின் இறைப்பணியைச் சார்ந்து எழுதப்பட்டுள்ளது. அப்போது சீடர்கள் எருசலேமை மையமாக வைத்து இறைப்பணியைச் செய்தனர்.
ஆண்டவர் திருச்சபையின் திறவு கோல்களை பேதுருவிடம் ஒப்படைத்தார். அவர் வழியாகத் திருச்சபையின் கதவுகள் யூதேயா, சமாரியா, புற இனத்தைச் சேர்ந்தவர்களுக்குத் திறக்கப்பட்டது. இந்த நூலின் 8ம் அதிகாரம் முதல் 12ம் அதிகாரம் வரை நற்செய்தியின் பரவுதல் யூதேயா, சமாரியா, புற இனத்தைச் சேர்ந்தவர்கள் என விரிவடைந்து செல்வதைக் காண முடிகின்றது.
இந்த நூலின் 13ம் அதிகாரம் துவங்கி 28ம் அதிகாரம் வரை முழுமையாகப் பவுலின் இறைப்பணியை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. தலைமையகம் எருசலேமிலிருந்து அந்தியோக்கியாவிற்கு இட மாற்றம் அடைகிறது.
இந்த நூலின் ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒரு பிரச்சினை எழுவதைப் பார்க்க முடியும். அதற்கான தீர்வும் அந்த அதிகாரத்தின் இறுதியில் காணப்படும்.
ஒவ்வொரு அதிகாரத்திலும் எழுதப்பட்டுள்ள சம்பவங்களை எளிதாகப் புரிந்து கொள்வதற்கு கீழ்க் காணும் உபதலைப்புக் குறிப்புகள் உதவும்.
அதிகாரம் |
விவரங்கள் - குறிப்புகள் |
|
1. |
முன்னுரை - பரிசுத்த ஆவியானவர் ஞானஸ்நானம் - விசுவாச வாழ்க்கையின் நோக்கம் - 12வது அப்போஸ்தலராக மத்தியா தெரிவு. |
|
2. |
பரிசுத்த ஆவியானவர் சீடர்கள் மேல் அருளப்படுதல் - பேதுருவின் முதல் அருளுரை - செய்தியின் மையம்: கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், அதற்கு நாங்கள் சாட்சி - சபை உருவானது. |
|
3. |
பேதுரு, யோவான் - கால் ஊனமுற்றவர் குணமடைதல் - சாலமோன் மண்டபத்தில் பேதுருவின் அருளுரை: இயேசுவே மெசியா என அறிவிப்பு. |
|
4. | யூத ஆலோசனைச் சங்கத்தின் முன் பேதுருவும் யோவானும் - முதல் விசாரணை |
|
5. |
அனனியாவும் சப்பிராவும் பொய் சொல்லுதல்; பேதுருவும், யோவானும் யூத சமயத் தலைவர்களால் துன்புறுத்தப்படுதல். |
|
6. |
சபை மூப்பர்கள் நியமித்தல். |
|
7. |
ஸ்தேவானின் அருளுரை. முதல் இரத்த சாட்சியாக தூய ஸ்தேவான் மரணம். (The Bible within the Bible). |
|
8 | யூதேயா, சமாரியாவில் நற்செய்தி அறிவிப்பு, எத்தியோப்பிய அமைச்சருக்கு பிலிப்பு நற்செய்தி அறிவித்தல். |
|
9. |
பவுல் மனமாற்றம் - பேதுருவின் குணமாக்கும் பணிகள். |
|
10. |
புற இனத்தவருக்கு நற்செய்தி - பேதுருவும் கொர்னேலியுவும். |
|
11. |
எருசலேம் திருச்சபை புற இனத்தவரை ஏற்றுக் கொண்டது. |
|
12. |
யாக்கோபு கொலை செய்யப்படுதல் , பேதுரு எருசலேமிலிருந்து வெளியேறினார். |
|
13. |
பவுலின் முதல் மிஷனரிப் பயணக் குறிப்புகள். |
|
14. |
|
|
15. |
எருசலேம் சங்கத்தின் தீர்மானம். |
|
16. |
பவுலின் இரண்டாவது மிஷனரிப் |
|
17. |
|
|
18. |
பவுலின் இரண்டு மற்றும் மூன்றாவது மிஷனரிப் |
|
19. |
பவுலின் மூன்றாவது மிஷனரிப் |
|
20. |
|
|
21. |
பவுல் எருசலேம் திரும்புதல். |
|
22. |
எருசலேம் தேவாலயத்தில் பவுல் சாட்சி - கிறிஸ்துவை அறிவித்தார். |
|
23. |
கிலவுதியு லீசியா முன் விசாரணை: யூதர்கள் பவுலுக்கெதிரான சூழ்ச்சி - பவுல் செசரியாவுக்கு அனுப்பப்படுதல். |
|
24. |
பெலிக்ஸ் முன் விசாரணை - பவுல் இரண்டு ஆண்டுகளுக்கு செசரியாவில் சிறைவாசம். |
|
25. |
பொர்க்கியு பெஸ்து முன் விசாரணை - சீசரின் விசாரணையை பவுல் நாடுதல். |
|
26. |
அகிரிப்பா முன் விசாரணை - பவுல் சாட்சி - கிறிஸ்துவை அறிவித்தார். |
|
27. |
பவுல் கைதியாக, கடல் மார்க்கமாக ரோமிற்கு அழைத்துச் செல்லப்படுவது. |
|
28. |
பவுல் ரோம் அடைதல் யூதர்கள் மத்தியில் கிறிஸ்துவை சாட்சி கூறுதல் - இரண்டு வருடம் ரோமில் நற்செய்தி அறிவிப்பு. |
இனி ஒவ்வொரு அதிகாரத்தின் விளக்கத்தை கற்றுத் தெளிவாக புரிந்து கொள்வோம்.

No comments:
Post a Comment