Tuesday, 19 October 2021

ஆதித் திருச்சபை விசுவாசிகளின் நம்பிக்கைகள் - 5

அவர்கள் இறை வேண்டுதலை நம்பினர்.

(They Believed in Prayer -  Acts 1:14/25)


ஆதித் திருச்சபை விசுவாசிகளின்  வாழ்க்கையில் ஜெபம் ஒரு இயல்பான செயலாக இருந்தது.   (Prayer is a normal day to day activity). 

ஜெபம் அவர்களது வாழ்வில்   எப்படிப் பின்னிப் பிணைந்து இருந்தது என்பதை அப்போஸ்தல நடபடிகள் நூலில் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. 

இந்த நூலின் ஒவ்வொரு அதிகாரத்திலும் ஜெபத்தைக் குறித்து ஒரு குறிப்பு ள்ளது

1. அப் 1: 15-26 : ஆண்டவர் வழி நடத்துதலுக்காக ஜெபித்தார்கள். 

2. அப் 1: 3-1 / 10-9 : ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி ஜெபித்தார்கள். 

3. அப் 4: 24-31 : நன்றி செலுத்தி ஊழியர்களுக்கும், ஊழியங்களுக்காகவும் ஜெபித்தார்கள். 

4. அப் 6:4 : தலைவர்கள் ஜெபம் பண்ணுவதில் உறுதியாகத்  தரித்திருந்தனர். 

5. அப் 7: 59-60 : புனித ஸ்தேவான் தமது மரண தறுவாயிலும், தன்னை கல்லெறிந்த மூர்க்க வெறி கொண்ட மக்களின் மன்னிப்பிற்காக ஜெபம் செய்தார்.

6.  அப் 8: 14-17 : சமாரியர்களும் பரிசுத்த ஆவியானவரைப்   பெற்றுக் கொள்ளும் படி பேதுருவும் யோவானும் அவர்களுக்காக ஜெபித்தார்கள். 

7. அப் 9: 11 : மனமாற்றம் அடைந்த திருத் தூதர் பவுல் ஆண்டவரின் இரக்கத்திற்காக ஜெபம் செய்தார். 

8. அப் 9: 17 : அனனியாவின் ஜெபம் - பவுலின் கண்கள் திறக்கப்பட்டது. 

9. அப் 9: 40 : பேதுரு தபீத்தாள் மரண கட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட  முழங்காலில் நின்று ஜெபித்தார். 

10. அப் 10: 2/30 : கொர்நெலியு - எப்பொழுதும் உபவாசித்து ஜெபிக்கும் தேவ மனிதர். 

11. அப் 11: 18 : புற இனத்தைச் சேர்ந்தவர்களும் சபையில் இணைந்தது குறித்து தேவனை மகிமைப் படுத்தி ஜெபித்தார்கள். 

12. அப் 12: 12 : பேதுருவின் விடுதலைக்காக மாற்குவின் வீட்டில் சபையார் ஜெபித்தார்கள். 

13. அப் 13: 1-3 : சபை உபவாசித்து ஜெபித்தது. ஆவியானவர் மிஷனரி தரிசனம் தந்தார். பவுல், பர்னபா - முதல் மிஷனரி பயணம் துவங்கியது. 

14. அப் 14: 23 : உபவாசித்து ஜெபித்து சபையின் மூப்பர்கள் நியமிக்கப் பட்டார்கள்.          

15. அப் 16: 13-15 : ஆற்றினருகே வழக்கமாய் ஜெபித்தார்கள் - ஐரோப்பா கண்டத்தின் திருச்சபை வாசல் திறந்தது. 

16. அப் 16: 25 : பவுலும் சீலாவும் நடு இரவிலும் ஜெபித்தார்கள். சிறைச்சாலை ஆலயமானது. 

17. அப் 20: 36/21:5 : பவுல் சபை மக்களுடன் முழங்காலில் ஜெபித்து கண்ணீருடன் விடைபெறுதல். 

18. அப் : 27-35 : புயலுக்கு மத்தியில் நம்பிக்கையற்ற சூழலில் பவுலின் நன்றி நிறைந்த ஜெபம். 

19. அப் 28:8  : பவுலின் சுகமளிக்கும் ஜெபம். 

ஜெபம் ஓர் மூச்சுக் காற்று:

ஆதி திருச்சபை விசுவாசிகள் ஜெபத்தில் வாழ்ந்தனர். முடிவுகளை எடுத்தனர்.  சுகமாக்கும்  வரம் செயல்பட்டது. கட்டுகள் அறுந்தது. விடுதலை பெற்றனர். ஊழிய எல்லைகள் விரிவடைந்தது. ஊழியர்கள் எழும்பினர். அபிஷேகம் ஊற்றப்பட்டது. எதிர்ப்புகள் முறிந்தது. அரச சபையிலும் "ஆண்டவர் உயிர்த்தெழுந்தார்" 'எனச் சாட்சி பகரப்பட்டது. 

ஒரு கிறிஸ்தவன்(ள்)  ஆன்மா  பரிசுத்த ஆவியானவர் அருளப்படுவதால் உயிர் பெறுகிறது. இது ஒரு மறுபிறப்பு அனுபவம். 

ஒரு மனிதர் உயிர் வாழக் காற்று தேவை. சுவாசம் இல்லையென்றால் உயிர் பிரிந்து விடும். அது போல மறுபிறப்பு டைந்த ஆவிக்குரிய உள்ளான மனிதர் தொடர்ந்து வாழ்வதற்கு ஜெபம் தேவை. ஜெபம் இல்லையென்றால் ஆவிக்குரிய சரீரம் செத்தது. 

ஆண்டவரது ஜெப வாழ்க்கை நாம் பின்பற்ற வேண்டியது சிறந்த முன்மாதிரி. அவர் அதிகாலையில் தனித்து ஜெபிக்கும் பழக்கம் உடையவர். ஒவ்வொரு செயலையும் ஜெபித்துச் செய்தார். பிதாவின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற நோக்கம் அவர் ஜெபத்தில் வெளிப்பட்டது. 

ஜெபத்தைக் குறித்து ஆண்டவரது சுருக்கமான போதனைகள் மத்தேயு (6:5-15) பகுதியில் உள்ளது. அவை நாம் எவ்விதம் ஜெபிக்க வேண்டும் என கற்றுத் தருகிறது. அவற்றிலிருந்து சில குறிப்புகள் :

1. அந்தரங்கத்தில் ஜெபித்தல் வேண்டும். (Pray in Secret - மத்தேயு 6:5-6)

ஆண்டவர் கற்றுத் தருவது "பொது வெளியில் ஜெபிப்பதற்கு முன்பாக தனித்து தேவ சமூகத்தில் ஜெபத்தில் காத்திருக்க வேண்டும்". (We must pray in secret before we pray in public). 

சபையில் அல்லது பொது வெளியில் அனைவரும் பார்க்கும் வகையில் ஜெபிப்பது தவறு இல்லை. ஆண்டவர் பல சமயங்களில் எல்லோரும் பார்க்கும் வகையில் ஜெபம் செய்துள்ளார். 

எல்லா மனிதருக்கும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் செய்ய வேண்டும் எனத் திருத் தூதர் பவுலும் திமொத்தேயு வுக்கு புத்தி சொல்கிறார் (1 திமொ 2:1).

ஆனால் தனித்து ஜெபிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் பொது வெளியில் ஜெபிப்பதற்கு எந்த தகுதியும் கிடையாது. 

வீட்டில் ஜெப அறையில் கதவைப் பூட்டி பிறர் பார்க்காத வகையில் ஜெபியுங்கள் என ஆண்டவர் கற்றுத் தருகிறார். இதன் பொருள் ஜெபம் என்பது பிறர் பார்த்துப் புகழ வேண்டும் எனப் பெருமைக்காகச்   செய்யக்கூடாது. 

2. உண்மையுடன் ஜெபிக்க வேண்டும். (Pray Sincerely மத்தேயு 6:7-8)

இறைவனது குணத்தைக் குறித்து ஆண்டவர் சொல்கிறார்: "கடவுள் அந்தரங்கத்தில் பார்க்கிறவர். ஆனால் எல்லோரும் காணும் வகையில் அவர் பதில் தருபவர்" . 

இது மிகவும் முக்கியமானது. இதன் பொருள் கடவுள் ஜெபத்தில் சொல்லப்படும் வார்த்தைகளை விடச் சொல்பவரது மனப்பான்மையைக்  கவனிக்கிறார். ஜெபம் என்பது உள்ளத்திலிருந்து உண்மையுடன் ஏறெடுக்கப் படவேண்டும். அப்போது கடவுள் அனைவரும் பார்க்கத் தகுந்த வகையில் பதில் தருவார். 

ஆண்டவர் கற்றுத் தரும் மற்றும் ஒரு பாடம் "வீண் வார்த்தைகளில் அலப்பக் கூடாது". அதிகமான வார்த்தைகள் தேவையில்லை. இறைவனுக்கு நமக்கு எது தேவை என்பது நாம் சொல்லாமலே தெரியும். எனவே சுருக்கமாகவும், தெளிவாகவும், உண்மையுடன் ஜெபிக்க வேண்டும். 

 3. The Lord's Prayer (or) The Diciple Prayer Model (மத்தேயு 6: 9-13)

இது "கர்த்தரின் ஜெபம்" எனச் சொல்லப்படுகிறது. உண்மையில் இது "சீடர்களுக்கான ஜெபம்" எனக் கூறுவது மிகப் பொருத்தமாக இருக்கும். 

இது சீடர்கள் எப்படி ஜெபிக்க வேண்டும் என ஆண்டவரால் உதாரணமாகச்  சொல்லிக்  கொடுக்கப்பட்ட ஒரு மாதிரி ஜெபம். 

இதில் எதற்காக ஜெபிக்க வேண்டும், எந்த தேவைகளுக்காக ஜெபிக்க வேண்டும், எப்படி ஜெபிக்க வேண்டும் என்கிற சத்தியம் உள்ளது. 

3.1: எதற்காக ஜெபிக்க வேண்டும் 

"The purpose of prayer is to glorify God's name and to ask for help to accomplish His will on earth". 

"நாம் இப்பூவுலகில் எதற்காகப் படைக்கப்பட்டோம் எனும் இறைவனின் நோக்கத்தை உணர்ந்து, அவரது கிருபையால்  அதைப் பரிபூரணமாக நிறைவேற்றி, அவரது  நாமத்தை மகிமைப் படுத்த வேண்டும்". (Warren W. Wiersbe.) 

இந்த மாதிரி ஜெபத்தின் முதல் மூன்று வேண்டுதல் இதைத்   தெளிவாக கற்றுத் தருகிறது. 

a. இறைவனது பெயர் போற்றப்பட வேண்டும். (God's Name).

b. இறைவனது அரசு வர வேண்டும். (God's Kingdom). 

c. இறைவனது சித்தம் பூமியில் செய்யப்பட வேண்டும். (God's Will). 

3.2. நான் மறைந்து நாமாக வேண்டும். 

இந்த ஜெபம் முழுவதும் பன்மையில் அமைந்துள்ளது. (there are no singular pro noun in this prayer; they are all plural). 

a. எங்களுக்கு வேண்டிய அனுதின ஆகாரத்தை எங்களுக்குத் தந்தருளும். 

b. எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிப்பது போல எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்

c . எங்களைச் சோதனைக்கு ட்படப் பண்ணாமல், தீமையிலிருந்து பாதுகாத்து ருளும். 

இதன் பொருள் தனிப்பட்ட தேவைகளை விட அனைத்து தேவ பிள்ளைகளின் தேவைகள், விடுதலை /ஆசீர்வாதம், பாதுகாப்பு இவற்றிற்காக ஜெபிக்க வேண்டும். 

நான் ஒரு  தனிநபர் அல்ல, மாறாகத் திருச்சபை எனும் உலகளாவிய மாபெரும் குடும்பத்தில் ஒரு அங்கமாக  நான் இருக்கிறேன் என்கிற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். 

3.3. மன்னிப்பின் மாண்பு  (மத்தேயு 6: 14-15)

14. மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார்.

15 மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்

ஆண்டவர் கற்றுத் தந்த ஜெபத்தின் பிற்சேர்க்கையாக (appendix) இந்த இரண்டு வசனங்கள் உள்ளன.  

நமது ஜெபங்கள் கடவுளால் கேட்கப் பட வேண்டும் என்றால், நாம் செய்ய வேண்டிய நிபந்தனை போல இவை காணப்படுகிறது. 

உண்மையில் அவை நிபந்தனை இல்லை. மாறாகக் கடவுள் நமது கொடூரமான பாவங்களை மன்னித்தார். ஆகவே நாம் நமக்கு விரோதமாகப் பிறர் செய்த சிறு பிழைகளை மன்னிக்க வேண்டும் என்கிற மாபெரும் சத்தியத்தை  நாம் வாது தில் மாகப்  பதிய வைத்து கொள்ள வேண்டும் ன்தற்காக சொல்பட்டுள்ளது. 

இந்த சத்தியத்தைப் புரிந்து கொள்ள ஆண்டவர் கற்பித்த "மன்னிக்க மறுத்த பணியாள்" உவமை உதவி செய்திடும். (மத்தேயு 18: 21-35).

ஒரு அரசர் தன்னிடம் வேலை பார்க்கும் பணியாளுக்கு 1,80,000 தெனாரியம் கடன் அளித்தார். (ஒரு தெனாரியம் என்பது ஒரு தொழிலாளியின் ஒரு நாள் கூலிக்கு இணையான ரோம வெள்ளி நாணயம்) 

அவர் திருப்பி செலுத்த வேண்டிய காலம் முடிந்து விட்டது. ஆனால் அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. எனவே அரசர் அவன் மனைவி, மக்களோடு அவனுக்குரிய  உடைமைகள்  யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க உத்தரவிட்டார். உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து கெஞ்சி தவணை அளிக்கும்படி வேண்டினான். அரசர் அவனுக்குப் பரிவுடன் இரங்கி அவனது கடன் முழுவதும் தள்ளுபடி செய்து மன்னித்தார். 

அந்த பணியாள் விடுதலை பெற்றதும் தன்னிடம் 100 தெனாரியம் கடன் வாங்கிய மனிதனின் கழுத்தைப் பிடித்து நெரித்து கடனை திருப்பி தா என அவனைக் கடுமையாக நெருக்கினான். 

அவனோ "கொஞ்சம் பொறுத்துக் கொள், நான் திருப்பி தந்து விடுகிறேன்" என்று மிகவும் கெஞ்சிக் கேட்டார். 

ஆனால் இவன் அதற்கு இசையாது கடனை திருப்பி தரும்வரை அவனைச் சிறையில் அடைத்தான். 

இதைக் கேள்விப்பட்ட அரசர் தான் மன்னிப்பு அளித்த அந்த பொல்லாத மனிதன் மேல் கடும் கோபம் அடைந்தார். நான் உனக்கு எவ்வளவு இரக்கம் காண்பித்தேன். அது போல நீயும் இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா? என்று கேட்டார். 

அரசர் கடும் சின்னத்துடன் அந்த பொல்லாத மனிதனை அவன் அனைத்துக் கடனையும் அடைக்கும்வரை வதைப்போரிடம் ஒப்படைத்தார். 

ஆண்டவர் நமது 1,80,000 பாவங்களை நமக்கு மன்னித்திருக்க, நாம் பிறர் நமக்கு விரோதமாகச் செய்த வெறும் 100 தவறுகளை மன்னிக்க வேண்டியது எவ்வளவு கட்டாயம். 

இதைத் தான் ஆண்டவர் நமக்குக் கற்றுத் தருகிறார். 

நாம் நமக்கு எதிராகத் தீங்கு இழைத்தவர்களை மனதார மன்னிக்கும் போது கர்த்தர் நமது ஜெபங்களைப் பிரியமாகக்  கேட்பார். 

ஸ்தேவான் ஜெபித்து போது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிதாவின் வலதுபுறம்  அமர்ந்திருந்தவர் எழுந்திருந்து அவனை கண்ணோக்கினார். 

நாம் ஜெபிக்கும் போதும் இவ்வாறு ஆண்டவர் ம்மைப் பிரியமுடன்  பார்க்க வேண்டும். 

இவ்விதம் கர்த்தருக்குப் பிரியமாக ஜெபிக்கும் தேவ பிள்ளைகளாக வாழ ஆவியானவர் நமக்கு அருள் புரியட்டும். ஆமென். 

2 comments: