நம்பிக்கைகள்.
பொற்காலம்:
திருச்சபை வரலாற்றில் முதல் மூன்று நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் மிக மிக உயர்வான ஆவிக்குரிய நிலையில் செயல் பட்டு வந்தனர். அது போன்றதொரு உயர்ந்த வாழ்க்கை வேறு எந்த காலகட்டத்திலும் இருந்ததில்லை.
அவர்கள் பரிசுத்த ஆவியானவரை முழு மனதுடன் பின்பற்றி அர்ப்பணிப்பு உணர்வுடனும் வாழ்ந்தனர். அவர்களது நோக்கமெல்லாம் இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமைப் படுத்தப் பட வேண்டும் என்று இருந்தது. இது ஆவியானவர் செயல் புரிகிறார் என்பதற்கு ஓர் சான்று.
அவர்களிடம் காணப்பட்ட ஆறு முக்கிய நம்பிக்கைகளை முதல் அதிகாரத்தில் பார்க்கலாம். அவை நாம் பின்பற்ற வேண்டிய நல்லதொரு வழிகாட்டியாக இருக்கிறது.
ஆறு முக்கிய நம்பிக்கைகள்:
1. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஆண்டவர் என நம்பினார்கள்.
(They Believed in the Risen Christ - 1:3)
2. கிறிஸ்துவின் இரண்டாவது வருகையை நம்பினார்கள்.
(They Believed in the Assurance of His Coming Again - 1: 9-11)
3. ஆண்டவரது ஐக்கியத்தை நம்பினார்கள்.
(They Believed in the Fellowship with the Lord - 1: 12-14)
4. விசுவாசிகளது ஐக்கியத்தை நம்பினார்கள்.
(They Believed in the Fellowship of Each Other - 1: 12-14)
5. ஜெபத்தின் வல்லமையை நம்பினார்கள்.
(They Believed in Prayer - 1:14/24-25)
6. கடவுளின் வழிநடத்துதலை நம்பினார்கள்.
( They Believed in God's leading - 1:15-23).
1. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஆண்டவர் என நம்பினார்கள்.
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்னர் 40 நாட்கள் சீடர்களுடன் இருந்தார். அவர் ஏறக்குறைய 500 நபர்களுக்குத் தரிசனம் தந்தார் என வேதம் சொல்கிறது.
எனினும் அவர் உயிர்த்தெழுந்தார் என்பதை முதலில் கேள்விப்பட்ட போது அதைச் சீடர்கள் நம்பவில்லை (மாற்கு 16:11-14).
அவர் அவர்கள் கண்களைத் திறந்தார் (லூக்கா 24: 31). மனதைத் திறந்தார் (லூக்கா 24: 45). அவரது சிலுவையின் பாடுகள், உயிர்த்தெழுதலின் மகிமையை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார் (லூக்கா 24: 25-27).
வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் திருமுறையில் எழுதப்படவில்லை என யோவான் குறிப்பிட்டுள்ளார் (யோவான் 20:30).
கிறிஸ்தவ நம்பிக்கையின் ஆணிவேர்:
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் எனும் நம்பிக்கை திருச்சபையின் ஆணிவேர். ஒரு கிறிஸ்தவரின் விசுவாச வாழ்க்கை இதன் மீது தான் கட்டப்படுகிறது. திருத் தூதர் பவுல் ரோமருக்கு எழுதிய கடிதத்தில் இதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்து விட்டனர். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார். (1 கொரிந்தியர்:15: 3-8).

No comments:
Post a Comment