Saturday, 30 October 2021

ஆதித் திருச்சபை விசுவாசிகளின் நம்பிக்கைகள் - 6

 அவர்கள் தேவ வழி நடத்துதலை நம்பினர்.

(They Believed in God's Leading-  Acts 1:16-23)


வாழ்க்கையில் எடுக்கும்  ஒவ்வொரு முடிவுகளும் மிக முக்கியமானவை. "சிறியது அல்லது பெரியவை", காரியங்கள் எப்படியாக இருந்தாலும்  வாழ்க்கை பயணத்தின் திசைகளை அவைகள் தீர்மானிக்கிறது. 

உதாரணமாக, கல்வி பயிலுகையில் தெரிவு செய்யும் பாடப்பிரிவு, வேலை,  திருமணம், பங்கேற்கும் திருச்சபை, குழந்தைகள் வளர்ப்பு, வசிக்கும் இடம், வீடு ட்டுல், நண்பர்கள், குடும்ப மற்றும் அலுவலக உறவுகளைப் பேணுதல் என இப்படிப் பல காரியங்களில் சரியான முறையில் முடிவுகள் எடுக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. இவை வாழ்க்கை பயணத்தின் திசையைத்  தீர்மானிக்கிறது. 

இந்த குதி சீடர்கள் எவ்விதம் சரியான முடிவுகளை எடுத்ர் என நமக்கு  ற்று தருகிறது (அப் 1: 16-23)ஆண்டவரோடு வாழ்ந்த காலத்தில்  முடிவுகளை எடுக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. அவரே வழி நடத்தினார். ஆனால்  இப்பொழுது, அவர்களே முடிவுகளை எடுக்க வேண்டிய  கட்டாயம் ஏற்பட்டுள்ளது

இந்தச் சூழ்நிலையில் அவர்கள் பின்பற்றிய வழி முறைகள் குறித்துத்  தியானிப்போம். 

1. அவர்களை வேதம் வழி நடத்தியது:

யூதாஸுக்கு பதிலாக வேறு ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமா? எனச் சீடர்கள் ஆலோசனை செய்தனர். 

இதற்கான முடிவை வேதத்தில் எழுதப்பட்டுள்ள இரண்டு சங்கீதங்களை  ஆதாரமாக வைத்து திருத் தூதர் பேதுரு முடிவு எடுத்தார் (சங்கீதம் 69:25/ 109:8). 

இந்த திருப்பாடல்களில் "யூதாஸ் மரணத்தைக் குறித்தும், அவருக்குப் பதிலாக வேறு ஒருவருக்கு அந்த பணி கொடுக்கப் படவேண்டும்" என்றும் தீர்க்க தரிசனமாக எழுதப்பட்டுள்ளது. 

"ஒரு முடிவை எடுக்கும் முன்பாக வேதத்தில் தைக் குறித்து என்ன சொல்ல பட்டுள்ளது" என்று வாசித்துத் தெளிவாகப் புரிந்து கொண்டு முடிவை எடுக்க வேண்டும். 

நவீன வாழ்க்கை முறையில் எழும் சில சந்தேகங்களுக்குத் தேவையான பதில் வேதத்தில் நேரிடையாக இல்லாது இருக்கக்கூடும். ஆனால் பதில்களுக்கான   குறிப்புகள் நிச்சயம் மறைமுகமாக இருக்கும். 

உதாரணமாகப் புகை பிடிக்கக் கூடாது என நேரிடையாக வேதத்தில் எழுதப்படவில்லை. ஆனால் "நமது உடல் கடவுளின் ஆலயம். ஒருவர் தமது உடலைக் கெடுத்தால் இறைவன் அவர் வாழ்வை அழிப்பார்" என்று எழுதப்பட்டுள்ளது. இதிலிருந்து உடலைக் கெடுக்கும் எந்தவித செயலையும் செய்யக் கூடாது எனப் புரிந்து கொள்ள முடியும்

தொலைக்காட்சி அல்லது சமூக ஊடகங்களில் உள்ள பொழுது போக்கும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் உட்கார்ந்து நேரத்தை வீணடிக்கக்கூடாது என நேரிடையாக எழுதப்படவில்லை. ஆனால் "ரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காரதேஎன எழுதப்பட்டுள்ளது.

வேத வாக்கியங்கள் வாசிப்பது நமது அறிவை தெளிவாக்கும். இருள் சூழ்ந்த இடத்தில் வெளிச்சம் திப்பது போல மனதைக் குழப்பத்திலிருந்து விடுவித்துச்  சரியான முடிவுகளை எடுக்க வழி நடத்தும்.  

இதையே சங்கீதக்காரன் இவ்வாறு பாடுகிறார். 

நீர் என் அறிவை விரிவாக்கும்போது, உம் கட்டளைகள் காட்டும் வழியில் நான் விரைந்து செல்வேன்.

என் காலடிக்கு உம் வசனம் விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!   (திருப்பாடல்கள் 119: 32/105)  

முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக வேதத்தை வாசித்து தேவ சித்தத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். வேத வசனங்கள் நம்மைச் சரியான முறையில் வழி நடத்தும். 

2. அவர்களை ஜெபம் வழி நடத்தியது: 

சீடர்கள் புதிய அப்போஸ்தலரைத் தெரிவு செய்யும் முன்பாக ஜெபம் செய்தார்கள்.  ஜெபம் அவர்களை வழி நடத்தியது.    

பின்பு அவர்கள் அனைவரும், "ஆண்டவரே, அனைவரின் உள்ளங்களையும்  அறிபவரே, யூதாசு திருத்தொண்டையும்திருத்தூதுப்பணியையும் விட்டகன்று,தனக்குரிய இடத்தை அடைந்து விட்டான். அந்த யூதாசுக்கு பதிலா யாரைத்  தெரிந்தெடுக்க வேண்டும் என இந்த இருவருள் ஒருவரை எங்களுக்குக்  காண்பியும்என்று  இறைவனிடம் வேண்டிக்கொண்டனர். (அப் 1: 24-25) 

இதைத் தேவ மனிதர் தாவிது மிக நன்றாக அறிந்திருந்தார். அவரது பல பாடல்கள் தேவ வழி நடத்துதலுக்காக ஜெபித்தவை. தேவனை நோக்கி தமது ஆத்துமாவை உயர்த்தினார். கிருபைக்காகக் காத்திருந்தார். கண்கள் கர்த்தரையே  நோக்கிப் பார்த்தது. கர்த்தருக்குப் பிரியமானதை மட்டுமே நிறைவேற்ற விரும்பினார். தேவனிடமிருந்து பதில்களைப் பெற்றுக் கொண்டார். 

அதிகாலையில் உமது கிருபையைக் கண்டடையச் செய்யும். உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; நான் நடக்க வேண்டிய அந்த வழியை எனக்குக் காட்டியருளும்; ஏனெனில், உம்மை நோக்கி என் உள்ளத்தை  உயர்த்துகின்றேன்.   

உம் திருவுளத்தை நிறைவேற்ற எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் கடவுள்; உமது நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியில் நடத்துவதாக! (சங்கீதம் 143: 8/10).

ஜெபம் சரியான தீர்மானங்களை எடுக்கும் மன உறுதியை அளிக்கும். 

3. அவர்களைத் தேவ பிரசன்னம் வழி நடத்தியது: 

சீடர்கள் தேவ பிரசன்னத்தில் வழி நடத்தப்பட்ட பல நிகழ்வுகள் அப்போஸ்தல நடபடிகள் நூலில் எழுதப்பட்டுள்ளது. 

தேவ தூதர்கள் வழி நடத்தினார்கள் (அப்: 5:19-20/ 8: 26-38/ 12: 7-11/). தரிசனங்கள் மூலம் வழி நடத்தப்பட்டார்கள் (அப்: 10: 10-48/ 16: 9-10/ 18: 9-10). ஆவியானவர்  வழி நடத்தினார் (அப்: 4: 8-21/ 5: 1-10/ 8: 39/ 13: 1-2)

பல தேவ மனிதர்கள் தேவ பிரசன்னத்தில் வழி நடத்தப்பட்ட சம்பவங்கள் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. 

உதாரணமாக, ஆபிரகாம் தாம் செல்லும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுச்  சென்றார். கர்த்தர் அவரது வாழ்க்கையின் முழு வரைபடத்தையும் அவருக்குக்  காண்பிக்கவில்லை. ஆனாலும் அவர் தேவனை முழுமையாக விசுவாசித்தார். தேவ பிரசன்னம் அவருடன் இருந்தது. 

அதனால் அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தேவ வழி நடத்துதலை அனுபவித்தார். அவர் வாழ்க்கையில் கர்த்தர் வழி நடத்திய ஆச்சரியமான விதங்களை இந்த வசனங்களை வாசித்துத் தெரிந்து கொள்ள முடியும். (ஆதி 12: 1-4/ 12: 7/ 13: 14-18/ 14: 22-24/ 15: 1-21/17: 1- 27/ 21: 9-14/ 22: 1-18/ 24: 2-9/)

சில சமயங்களில் அவர் தனது சொந்த வழியில் முடிவுகளை எடுத்தாலும் அதை அறிக்கையிட்டு மீண்டும் தேவனோடு பயணம் செய்தார் (ஆதி 12: 11-20/ 16: 1-4/ 20:1-14/ )

தேவ பிரசன்னம் தங்களுடன் வரவில்லை என்றால் நாங்கள் இங்கிருந்து புறப்பட்டுச் செல்ல மாட்டோம் என மோசே அறிக்கை செய்தார். இந்த வேத பகுதியை எப்போதும் நாம் நினைவில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.  

அதற்கு ஆண்டவர், "எனது பிரசன்னம் உன்னோடு செல்லும். நான் உனக்கு
இளைப்பாறுதல் அளிப்பேன்" என்று கூற, மோசே அவரிடம், "உமது
பிரசன்னம் கூடவரவில்லையெனில் எங்களை இங்கிருந்து போகச் செய்யாதீர்". (
யாத் 33: 15) என்றார்.

வாழ்க்கையில் நாம் எடுக்கும் முடிவுகளை வேதம் காண்பிக்கும் வழியில் எடுப்பது சிறந்தது. வேதம் நல் வழியைக் காண்பிக்கும். நல் ஆலோசனையை அளிக்கும்.  தேவ சித்தத்தை உணர்ந்து கொள்ள உதவும்.  

ஜெபித்து எடுக்கும் முடிவுகள் மனதில் தேவ சமாதானத்தைத் தரும். மனதை உறுதிப் படுத்தும். அந்த பாதையில் பயணம் செய்யும் தைரியத்தைத் தரும்.  

தேவ பிரசன்னம் எதிர்ப்புகளைக் கண்டு பயப்படாமல் அந்த செயலை  வெற்றிகரமாக நிறைவேற்றி முடிக்கும்  வல்லமையை அளிக்கும். 

வாழ்க்கையின் ஒவ்வொரு முடிவுகளையும் வேதத்தை வாசித்து, ஜெபித்து, தேவ பிரசன்னத்தில் தரித்திருந்து எடுக்க இறைவன் அருள் புரியட்டும். ஆமென். 

No comments:

Post a Comment